நாகப்பட்டினம்,செப்.5: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 252 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகையில் குறைதீர் கூட்டம்: 252 மனுக்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.