பரமக்குடி,: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மீண்டும் முளைத்ததை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடர் மழையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேமங்கலம், தாளையடிக்கோட்டை, சாலியவாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மீண்டும் முளைத்துவிட்டன. ஒரு சில பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் வயல்களில் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகியுள்ளன.
தொடர் மழையால் மீண்டும் முளைத்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலகம் முற்றுகை: பரமக்குடி அருகே பரபரப்பு
