×

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தேவதானப்பட்டி, ஜூலை 25: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தும்மலப்பட்டியைச் சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகேசன்(40). இவர் நேற்று முன்தினம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு, தென்னை மரத்தில் ஏறும்போது தவறி விழுந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே முருகேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முருகேசனின் மனைவி நித்யா(31) தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Murugesan ,Tummalapatti ,Vathalakundu ,Dindigul district ,
× RELATED ஊராட்சி வாகன பேட்டரி திருட்டு: போலீசார் விசாரணை