×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

தஞ்சாவூர்,நவ.10: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை வழியாக சென்னை- தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று (10ம்தேதி) மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06001) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,

சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்.06002) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு செல்லும். இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Chennai ,Diwali festival ,Tuticorin ,Diwali ,Tanjore ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா...