சென்னை: திரையரங்குகள் திறக்கப்படும் போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது எனவும் அவர்களே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.
