திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியில் விடிந்தும் எரியும் உயர் மின் கோபுர விளக்கு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியி்ல் விடிந்தும் எரியும் உயர் மின் கோபுர விளக்கு குறித்து பல முறை புகார் கொடுத்தும் பயனில்லை என்று பேரூராட்சி பொதுமக்கள் புலம்புகின்றனர். முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்ட பகுதியாகும். பேரூராட்சியை பொறுத்தவரை அடிக்கடி நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கி உள்ளது. சமீபகாலமாக முத்துப்பேட்டை பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகலிலும் அடிக்கடி மின் விளக்குகள் எரிந்து வருகிறது. பல இடங்களில் காலை விடிந்தும், ஆப் செய்யாததால் மாலை வரை மின் விளக்கு எரிகிறது. குறிப்பாக, பல முறை சுட்டி காட்டப்பட்டும், முத்துப்பேட்டை கோவிலூர் ஈசிஆர் சாலை ரவுண்டனாவில் உள்ள உயர கோபுர மின் விளக்கு இரவு, பகல் என 24 மணி நேரமும் எரிந்து வருகிறது.

The post திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியில் விடிந்தும் எரியும் உயர் மின் கோபுர விளக்கு appeared first on Dinakaran.

Related Stories: