திருச்சிக்கு இன்று வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்க திமுகவினர் திரண்டு வாருங்கள்

 

திருச்சி, அக்.6: திருச்சிக்கு இன்று வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திமுகவினர் திரண்டு வாருங்கள் என்று மாநகர செயலாளரும், மேயருமான அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து, அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

திருச்சி வரும் தமிழக முதல்வருக்கு விமான நிலையத்தில் மத்திய மாவட்ட, வடக்கு மாவட்ட மற்றும் மாநகர திமுக சார்பில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி. தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், செயல்வீரர்கள், திமுக மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகர திமுக செயலாளர் மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

The post திருச்சிக்கு இன்று வருகை தரும் தமிழக முதல்வரை வரவேற்க திமுகவினர் திரண்டு வாருங்கள் appeared first on Dinakaran.

Related Stories: