ஊட்டி,அக்.27: தாவரவியல் பூங்காவில் உள்ள கள்ளி செடிகளில் காய்த்துள்ள கள்ளி பழங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர்செடிகள், மூலிகை தாவரங்கள், மரங்கள்,கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகள் ஆகியன உள்ளன. இதனை காண நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவில் உள்ள பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் தாவரங்களை கண்டு ரசிப்பதோடு மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த பூங்காவில் அவ்வப்போது சில வித்தியாசமான மலர்கள் மரங்கள் மற்றும் செடிகளில் பூப்பது வழக்கம். அதேபோல், தற்போது ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கள்ளி பூங்காவில் சில செடிகளில் கள்ளி மலர்கள் மற்றும் பழங்கள் காய்த்துள்ளன. இவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஒரு சிலர் இந்த கள்ளிச் செடிகளுக்கு அருகே நின்று புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். அதேசமயம் பாதுகாப்பு கருதி கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
The post தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் கள்ளிப் பழங்கள் appeared first on Dinakaran.