தாலிச்செயின் திருட்டு

 

மூணாறு, ஜூலை 22: கேரளா மாநிலம், மூணாறு அருகே மறையூர் பகுதியில் பத்தடிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா. 8 மாத கர்ப்பிணியான இவர், தனது தாயார் சசிகலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர், நித்யா மற்றும் அவரது தாயார் தங்கியிருந்த அறையில், அலமாரியில் இருந்த 3 பவுன் தாலிச் செயின் திருடிச் சென்றார். மின்சாரம் இல்லாததால் மர்மநபரை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின்பேரில், மறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தாலிச்செயின் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: