தாம்பரம் – கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம், செப்.20: தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், நேற்று முதல், வரும் அக்டோபர் 3ம் தேதி வரை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எழும்பூர்- விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள தாம்பரம் பணிமனையில் நேற்று (19ம் தேதி) முதல் அக்டோபர் 3ம் தேதி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.
இதனால், தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக இரவு 11.40 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், செப்டம்பர் 24ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக இரவு 11.35 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாம்பரம் – கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: