தஞ்சாவூரில் 29ம்தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர், செப்.24: தஞ்சாவூர் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூரில் 29ம்தேதி மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: