தஞ்சாவூரில் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர், ஆக.17: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை துறை, நீர்வளத்துறை, மருத்துவத்துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: