×

டாஸ்மாக் கடையில் ரகளை- 2பேர் கைது

தர்மபுரி, ஜூலை 8:மொரப்பூர் எஸ்எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டயம்பட்டி டாஸ்மாக் கடையில், 2 பேர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதைப்பார்த்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர்கள் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், டாஸ்மாக் கடையின் முன் பாதுகாப்பு கம்பி வலையை சேதப்படுத்தினர். போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் மொரப்பூர் போளையாம்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (32), நடேசன் (36) என்பது தெரியவந்தது. பின்னர், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post டாஸ்மாக் கடையில் ரகளை- 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmak store ,Dharmapuri ,Morapur ,SSI Rajendran ,Mundinam ,Kandayampatti ,Dinakaran ,
× RELATED மணிமங்கலத்தில் செயல்பட்டு வரும்...