ராஜபாளையம், ஜூலை 21: ராஜபாளையம் அருகே சேதமடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 மற்றும் 2க்கும் இடைப்பட்ட தெருவில் குடியிருப்பு நெருக்கமாக உள்ள பகுதியில் மின்கம்பம் உள்ளது. அவ்வழியாக சென்ற லாரி மோதியதன் காரணமாக மின்கம்பம் அடிப்பாகம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இது பொதுமக்களின் மீது சாய்ந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும்.
போக்குவரத்து மிகுந்த பகுதியில் விபத்து ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் கூறுகையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்கம்பம் மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மின்கம்பம் சாயும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post சேதமடைந்ததால் சாயும் அபாயம் மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.