×

செல்போன் திருடியதாக சிறுமி மீது வீண் பழி கேரள போலீஸ் மன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்: ரூ.1.5 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆய்வு  மையத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பெரிய விண்கலனுடன் ஒரு லாரி  சென்றது. இது ஆற்றிங்கல் வழியாக சென்றபோது, ஆற்றிங்கல் தோன்னக்கல் பகுதியை சேர்ந்த  ஜெயச்சந்திரன் அதை காண்பதற்காக தனது 8 வயது மகளுடன் சென்றார். அப்போது,  பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ரஜிதாவின் செல்போன் மாயமாகியுள்ளது. அதை  ஜெயசந்திரனின் மகள் எடுத்திருக்கலாம் என கருதி, போலீசார் அவரிடம் விசாரித்தனர். தான் திருடவில்லை என்று சிறுமி கூறியபோதும், அவளையும், ஜெயசந்திரனையும் பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் அவமானப்படுத்தி திட்டினர். இதை தாங்க முடியாமல் சிறுமி அழுதார். இந்நிலையில், பெண் போலீசின் செயலால் பாதிக்கப்பட்ட  சிறுமிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடும்படி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் விசாரித்தார். கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘இது எதிர்பாராமல் நடந்த சம்பவம். பெண் போலீஸ் ரஜிதா, சிறுமியிடம்  மன்னிப்பு கேட்டுள்ளார்.   எனவே, சிறுமிக்கு நஷ்டஈடு கொடுக்க தேவையில்லை,’ என  கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறுமிக்கு நஷ்டஈடாக ரூ.1.5  லட்சமும், நீதிமன்ற செலவாக ரூ.25 ஆயிரமும் கொடுக்கும்படி உத்தரவிட்டார். …

The post செல்போன் திருடியதாக சிறுமி மீது வீண் பழி கேரள போலீஸ் மன்னிப்பை நிராகரித்தது உயர் நீதிமன்றம்: ரூ.1.5 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : High Court ,Kerala Police ,Thiruvananthapuram ,Thiruvananthapuram, Kerala ,Court ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.!...