தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்நிலையில், வளி மண்டலமேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 9ம் தேதி உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் நேற்று முன்தினம் அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் ஆந்திராவில் அது கரையைக் கடந்தது. இதனால் அங்கு பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

அதே நேரத்தில் தமிழகத்தில் நிலவிய வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக, வால்பாறையில் 110 மிமீ மழை பெய்துள்ளது.சென்னையில், புறநகரில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். 

Related Stories: