திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவசால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருச்சி மாநகராட்சி 61வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், காவேரி நகர் அருகே புதியதாக விரிவாக்கப்பட்ட பகுதியில் அரசு பூங்கா அமைப்பதற்காக வீட்டுமனை பிரிக்கும் போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்கவில்லை. இதனால் அந்த இடம் பள்ளமாக உள்ளது. மேலும் கருவேல முட்களும் மண்டி கிடக்கிறது.
திருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி
