சிறுமியை மீண்டும் கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் வலை வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட

வேலூர், ஆக.13: வேலூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். வேலூர் மேல்மொணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல்(22), கூலித்தொழிலாளி. இவர் வேலூரில் ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, சில வாரங்களுக்கு முன் வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை திருமணம் செய்து கொண்டு 3 நாட்கள் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை மீட்டு, பலமநேனரியில் உள்ள சிறுமியின் பாட்டி வீட்டில் தங்க வைத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல், சிறுமியை மீண்டும் கடத்தி சென்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஒரு கோயிலில் மீண்டும் திருமணம் செய்துள்ளார். பின்னர் ராகுல் அவரது வீட்டில் சிறுமியுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் மகளை காணாமல் பல்வேறு இடங்களில் தேடிய பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையில் தலைமறைவான ராகுலை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சிறுமியை மீண்டும் கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ வழக்கில் வலை வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட appeared first on Dinakaran.

Related Stories: