சாராயம், மதுபானம் விற்ற 82 பேர் கைது

அரூர், செப்.4: அரூர் கோட்டத்தில் சாராயம், மது விற்பனை செய்யப்பட்ட வழக்கில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில், போலீசார் நடத்திய சோதனையில், அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கில் ஓட்டல், பெட்டிக் கடையில் மது குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில், கடந்த மாதத்தில் 21 பெண்கள் உள்பட 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1,740 மதுபாட்டில்கள், 2 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊறல், 3 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சாராயம், மதுபானம் விற்ற 82 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: