×

சம்பா நெட்டி அரசு பள்ளிக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை

திருவாடானை, ஜூலை 8: திருவாடானை அருகே சம்பா நெட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே சம்பா நெட்டி கிராமத்தில் பல வருடங்களாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு சத்துணவு அமைப்பாளர் உதவியாளர் உட்பட 4 பேர் பணிபுரிகின்றனர். இந்தப் பள்ளிக்கு காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பாநெட்டி கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘‘இங்கு தேவையான ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் என பணியாளர்கள் உள்ளனர். கட்டிடம் வசதியும் நன்றாக உள்ளது. ஆனால் குடிதண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த பள்ளிக்கு தேவையான குடிதண்ணீர் மற்றும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றனர்.

The post சம்பா நெட்டி அரசு பள்ளிக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Samba Netty Government School ,Thiruvadanai ,Samba Netti village ,Panchayat Union Primary School ,Samba Netty ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த பாம்புகள்