×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 31: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேவையற்ற ஆய்வுக்கூட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் கல்யாண சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் நடராஜன், யராஜா ராஜேஸ்வரன், சின்னபொன்னு, பரஞ்சோதி, மேனகா, ஆறுமுகம், சத்துணவு நூர்ஜஹான், கலைசெல்வி, மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu Government Employees Union ,Madurai Collector ,Office ,Government Employees' Union ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்