கோட்டுச்சேரியில் ₹22 லட்சத்தில் கலாச்சார மேடை கட்டும் பணி

 

காரைக்கால்,மார்ச் 13: கோட்டுச்சேரியில் ₹22 லட்சத்தில் கலாச்சார மேடை அமைக்கும் பணியை சந்திர பிரியங்கா எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் ₹22 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரியம்மன் கோயில் தெருவில் கலாச்சார மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவநேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

The post கோட்டுச்சேரியில் ₹22 லட்சத்தில் கலாச்சார மேடை கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: