கூந்தபனை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

முத்துப்பேட்டை, ஆக. 12: முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையம் அருகே சாலையோரம் பிரசித்தி பெற்ற கூந்தபனை  பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்வேறு பூஜைகள் அபிசேகம் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம் அதனால் இதற்கு அதிகளவில் பக்தர்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று கட ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் அபிசேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தன. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

The post கூந்தபனை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: