×

குழந்தைகளுடன் பெண் மாயம்

 

கமுதி, ஜூன் 19: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் குழந்தைகளுடன் பெண் ஒருவர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ்(36). இவரது மனைவி மகேஸ்வரி (32). இரண்டுகுழந்தைகள் உள்ளனர். கணவன்,மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு, செல்வதாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து மகேஸ்வரியில் தந்தை கண்ணன் கமுதி காவல் நிலையத்தில் அளித்த, புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குழந்தைகளுடன் பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Red Army ,
× RELATED மாரியம்மன் கோயிலில் கொள்ளைக்காரன் பூஜை