குளித்தலையில் சமுதாய வளைகாப்பு எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கிவைத்தார்

 

குளித்தலை, அக். 20: குளித்தலையில் வளைகாப்பு நிகழ்ச்சியை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கிவைத்தார். கரூர் மாவட்டம் குளித்தலை வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்திம் சார்பில் குளித்தலை நகர்ப்புற மற்றும் கிராமப்புற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அண்ணா சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது. குளித்தலை வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வினோதினி தலைமை வகித்தார்.

நகர்மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா முன்னிலை வகித்தார். எம்எல்ஏ மாணிக்கம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 125 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல், சீர்வரிசை தட்டுக்களை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டது. இதில் குளித்தலை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post குளித்தலையில் சமுதாய வளைகாப்பு எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கிவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: