தஞ்சாவூர், ஆக. 22: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோ திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் கும்பகோணத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 42 வேகன்களில் ஏற்றி சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
The post கும்பகோணத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு 2000 டன் நெல் சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.