கிணத்துக்கடவு ஊராட்சியில் காலை உணவு திட்டம் துவக்கம்

 

கிணத்துக்கடவு, ஆக.26: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இரண்டாம் கட்ட காலை உணவு திட்டத்தை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் மற்றும் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலை உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்த அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினர். பின்னர் மாணவர்களுக்கு உணவு பறிமாறினர்.

இதில், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், நகர செயலாளர் கனகராஜ், பள்ளி தலைமையாசியை கண்ணம்மாள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதேபோன்று கிணத்துக்கடவு ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர் ஜோகராபானு அல்தாப்உசேன், துணைத்தலைவர் பாமா சண்முகசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post கிணத்துக்கடவு ஊராட்சியில் காலை உணவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.