காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், மாநகராட்சி பகுதியை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 3 வாகனங்களில் ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு கொரோனா விழிப்புணர்வு வாசங்கள் ஒலிக்க விட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு வாகனங்களை ஈரோடு டவுன் டிஎஸ்பி ராஜூ நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்….

The post காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: