×

கார்- வேன் நேருக்குநேர் மோதி 2 பேர் பலி 5 பேர் படுகாயம் கண்ணமங்கலம் அருகே விபத்து

கண்ணமங்கலம், மே 6: கண்ணமங்கலம் அருகே கார், வேன் நேருக்குநேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தயாசேகர்(61). இவர், நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் காரில் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். பின்னர், சுவாமி தரிசனம் செய்து முடிந்ததும் நேற்று மதியம் மீண்டும் சித்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தயாசேகர் காரை ஒட்டிக்கொண்டு வந்தார். அவருடன் சூரியசேகர்(55), மதுமிதா(45) மோனிகா(43) ஆகியோர் காரில் வந்தனர். அப்போது, ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன்(40) திருவண்ணாமலையை நோக்கி வேனை ஓட்டி வந்துள்ளார். தொடர்ந்து, கண்ணமங்கலம் அடுத்த அய்யம்பாளையம் காந்தி நகர் ஏரிக்கரையில் வந்தபோது காரும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தயாசேகர் மற்றும் சூரிய சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், காரில் வந்த மதுமிதா, மோனிகா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல், வேனில் வந்த பத்மாவதி(70), தினகரன்(33), ஆதித்யா(13) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் சிறுகாயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார்- வேன் நேருக்குநேர் மோதி 2 பேர் பலி 5 பேர் படுகாயம் கண்ணமங்கலம் அருகே விபத்து appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Dinakaran ,
× RELATED ராணுவ வீரரின் 2 மகள்கள் தூக்கு போட்டு...