காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.76 லட்சம்

 

காஞ்சிபுரம், மார்ச் 1: மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில். இக்கோயிலில், இருந்த 3 உண்டியல்கள் 70 நாட்களுக்கு பிறகு நேற்று கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டது.

காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோயில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீ காரியம் சுந்தரேசன், மணியக்கார் சூரியநாரயணன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 76 லட்சத்து 4 ஆயிரத்து 234 ரூபாய் ரொக்கமும், 385.100 மில்லி கிராம் தங்கமும், 645.760 கிராம் வெள்ளி பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இத்தொகை முழுவதும் ஸ்டேட் வங்கிக் கிளையில் வைப்பு செய்யப்பட்டது.

The post காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.76 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: