வருசநாடு: கடமலைக்குண்டு அருகே, சாலையோரம் வளர்ந்திருக்கும் செடி, கொடிகளால் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டுவில் இருந்து குமணன்தொழு, காமன்கல்லூர் வழியாக கோம்பைத்தொழு கிராமம் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. சாலையை முறையாக பராமரிக்காததால், இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், சாலையின் அகலம் குறைந்துள்ளது. ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் வரும்போது, அவைகள் விலகிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடமலைக்குண்டு அருகே சாலையோர செடிகளால் போக்குவரத்துக்கு இடையூறு: அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
