×

கடமலைக்குண்டு பகுதியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு

வருசநாடு, ஜூன் 9: கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வன். இவரது டூவீலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து தெய்வன் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலர் திருடனை தேடி வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளில் தொடர்ந்த டூவீலர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து இப்பகுதியில் டூவீலர் திருட்டு நடைபெற்று வருகிறது.

இரவு நேரங்களில் தான் அதிகளவு டூவீலர் திருட்டு நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளிலும் டூவீலர் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளூர் திருடர்களா? அல்லது வெளியூர் திருடர்களா? என்பது பற்றி காவல்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்றனர்.

The post கடமலைக்குண்டு பகுதியில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kadamalaikundu ,Varusanadu ,Deivan ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு பகுதியில் கூட்டமாக...