கடன் விரக்தியில் வாலிபர் தற்கொலை

 

கோவை ஜூலை 28: கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள சுக்ரவார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர் கடந்த சில ஆண்டாக சரியாக வேலைக்கு செல்லாமல் சிலரிடம் கடன் வாங்கி மது குடித்து சுற்றி வந்துள்ளார். அதிக கடன் காரணமாக விரக்தியில் காணப்பட்ட இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் விரக்தியில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: