ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 12 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேலஇழந்துவட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (50). இவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் ஒரத்தநாடு போலீசார் தர்மராஜன் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தர்மராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post ஒரத்தநாடு அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.