×

உலக சுகாதார அமைப்பின் புகாருக்குள்ளான இருமல் மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு: ஒன்றிய அரசு தகவல்..!

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் புகாருக்குள்ளான இருமல் மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து பலியாயின. இது பற்றி ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், அந்த குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்துதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தது. உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், ‘‘குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரியானாவை சேர்ந்த, ‘மெய்டென் மருந்து நிறுவனம்’ தயாரித்துள்ள இந்த மருந்துகளில் அங்கீகரிக்கப்படாத, தடை செய்யப்பட்ட கலவைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. குழந்தைகள்  இறப்புக்கு இதுவே காரணமாக இருக்கலாம் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. புரோ மெத்தசைன், கோபெக்ஸ்மாலின், மேக் ஆப், மா கிரிப் இன் கோல்ட் ஆகிய 4 மருந்துகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அந்த மருந்து நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தயாரிப்புகளுக்கு உரிமம் பெற்றுள்ளது. மேலும், இந்த நிறுவனம் இந்த மருந்துகளை காம்பியாவுக்கு மட்டுமே தயாரித்து ஏற்றுமதி செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய அரசு, குறிப்பிட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை என கூறியுள்ளது. இதனிடையே இருமல் மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. …

The post உலக சுகாதார அமைப்பின் புகாருக்குள்ளான இருமல் மருந்தின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைப்பு: ஒன்றிய அரசு தகவல்..! appeared first on Dinakaran.

Tags : World Health Organization ,Union Government ,Delhi ,African ,Dinakaran ,
× RELATED குருதி கொடையாளர் தினம் அதிக ரத்ததானம்...