சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி ஒரு சவரன் ரூ.37,872, 31ம் தேதி ரூ.38,080க்கும் தங்கம் விற்பனையானது. 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் விலையில் விற்பனையானது. தொடர்ந்து 2ம் தேதி சவரனுக்கு ரூ.8 குறைந்து ஒரு சவரன் ரூ.38,072க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 3ம் தேதி ரூ.38,160க்கு தங்கம் விற்பனையானது. நேற்று முன்தினம் (4ம் தேதி) ஒரு கிராம் ரூ.4,790க்கும், சவரன் ரூ.38,320க்கும் நேற்று சவரன் ரூ.38,480க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.38,712க்கு விற்பனை : தீபாவளி நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் அதிர்ச்சி
