×

உண்மையை பேசுங்கள் பாஜ.வால் மக்களை ஏமாற்ற முடியாது: காங். தலைவர் கார்கே பேச்சு

சிம்லா: ‘இமாச்சல் மக்களை பாஜ.வால் ஏமாற்ற முடியாது,’ என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற மல்லிகார்ஜுன கார்கே, முதன் முறையாக இமாச்சலத்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் அவர் பேசியதாவது: இங்குள்ள மக்கள் படித்தவர்கள், எல்லாவற்றையும் புரிந்து கொண்டு (வாக்களிப்பதில்) பரிசீலித்து முடிவு எடுப்பார்கள். வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாகவும், வேலை வாய்ப்புகள் அளிப்பதாகவும் பாஜ.வால் நாடு முழுவதும் மக்களை ஏமாற்ற முடிந்திருக்கலாம். ஆனால், இங்கு அவ்வாறு செய்ய முடியாது. ஏன் பொய் பேசுகிறீர்கள்? உண்மையைப் பேசுங்கள். தேர்தல் மூலமாக நான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், ஜேபி.நட்டா பாஜ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி யாருக்கும் தெரியாது. ஏனென்றால், பாஜ.வில் தேர்தல் இல்லை, வேட்பு மனு மட்டுமே உள்ளது. இமாச்சல பிரதேச அரசில் 65 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாடு முழுவதும் 14 லட்சம் பணியிடம் காலியாக உள்ளன. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கத்தை ஒன்றிய அரசு கவனிக்கவில்லை. விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களை விற்க மண்டி இல்லை. இவ்வாறு அவர் பேசினார்….

The post உண்மையை பேசுங்கள் பாஜ.வால் மக்களை ஏமாற்ற முடியாது: காங். தலைவர் கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,President ,Gharke ,Shimla ,Himachal ,Kharge ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ்...