ஈரோடு,மே9: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.98 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 8ம் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி துவங்கி, கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் நேற்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை 10,753 மாணவர்கள்,12,170 மாணவிகள் என மொத்தம் 22923 பேர் எழுதினர்.
இதில் 10,353 மாணவர்களும், 11,878 மாணவிகள் என மொத்தம் 22,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் 96.98 தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு பெற்ற 95.72 சதவீத தேர்ச்சி சதவீதத்தை விட, நடப்பாண்டு 1.06 சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 8ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.98% பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.