ஜெனீவா : கொரோனா குறித்து ஆராய வூகான் செல்லவிருந்த உலக சுகாதார குழுவை அனுமதிக்க சீனா மறுப்பது ஏமாற்றமளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவி, இன்று உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்தது. இந்த சிறப்புக்குழு உகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு சீன அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது : உலக சுகாதார நிறுவனம்!!
