×

இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அரசு ஊழியர் கைது

சேலம்: சேலம் அருகே நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டி அருகேயுள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. கடந்த 10ம் தேதி இரவு தனது கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இரவு 11.30 மணியளவில் கழிவறை செல்வதற்காக வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது எதிர்வீட்டில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் சாந்தியின் அருகே சென்றுள்ளார். அவர் சாந்தியின் கையை பிடித்து இழுத்து, வா இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்துள்ளார். அதற்கு சாந்தி மறுப்பு தெரிவித்து சத்தமிட்டுள்ளார். சாந்தியின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அங்கிருந்து மணிகண்டன் ஓட்டம் பிடித்தார். இதுபற்றி பனமரத்துப்பட்டி போலீசில் சாந்தி புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று மாலை அவரை கைது செய்தனர். இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து கைதான மணிகண்டன், ஏற்காடு மாரமங்கலத்தில் உள்ள பழங்குடியின மாணவர் விடுதியில் சமையலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அரசு ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது 18...