கேரள: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து நொடிக்கு மூவாயிரத்துத் தொண்ணூறு கனஅடியாக அதிகரித்துள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத்துக்கும் அடிப்படையாகத் திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. கேரளத்திலும் தேனி மாவட்டத்திலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு
