இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை, ஜன. 25: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக வருகின்ற 06.02.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு, விண்ணப்பிக்க 02.01.2004 முதல் 02.07.2007 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
பனிரண்டாம் வகுப்பு அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.

இத்தேர்வு குறித்த விபரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். தகுதி உள்ளவர்கள் வருகின்ற 06.02.2024க்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04575-245225 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: