×

ஆலஞ்சோலை அருகே மலைப்பாம்பு சிக்கியது

 

அருமனை, ஜூலை 8 : ஆலஞ்சோலை அருகே தனியார் எஸ்டேட் காவலர்கள் வீட்டின் ஓரம் பொருட்கள் இருந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் இது குறித்து களியல் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து சுமார் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து யானை நிறுத்தி என்ற காட்டுப் பகுதியில் கொண்டு விட்டு சென்றனர்.

 

The post ஆலஞ்சோலை அருகே மலைப்பாம்பு சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Alanjole ,Arumana ,
× RELATED அருமனை அருகே குளித்த போது தண்ணீர்...