ஆறுகளில் குளிப்பவர்களுக்கு ‘அலார்ட்’

 

சிவகங்கை, அக். 4: பருவமழை காலங்களில் மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து இருக்கும். அப்போது, நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிப்பது வழக்கம். தண்ணீர் ஓடும் வேகமும் அதிகரித்திருக்கும். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

The post ஆறுகளில் குளிப்பவர்களுக்கு ‘அலார்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: