×

ஆபரேஷன் சிந்தூர் அம்மன் கோயிலில் பெண்கள் தேசியக்கொடியுடன் பிரார்த்தனை

 

 

கும்பகோணம், மே 10: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் தங்களின் இன்னுயிரை பற்றி கவலைப்படாது மக்களுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நமது முப்படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது என்று கும்பகோணம் லெட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சிவலலிதா மண்டலி குழுவினர் சார்பாக 35 மகளிர்கள் கையில் இந்திய தேசிய கொடிபிடித்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது சாதி, மொழி, இனம் என எல்லாம் கடந்து இந்திய மக்களுக்கு பாதுகாப்புகேட யமாக இருக்கும் இந்த வீரர்களுக்கு நலம் மிகவும்முக் கியமானது, விரைவில் அமைதி திரும்பட்டும், பிற உயிர்களை பலி வாங்கும் சிந் தனை அழியட்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

The post ஆபரேஷன் சிந்தூர் அம்மன் கோயிலில் பெண்கள் தேசியக்கொடியுடன் பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Operation Chintur Amman ,Temple ,Kumbakonam ,India ,Pakistan ,Bahalkam ,Jammu ,Kashmir ,Operation Chintour ,Badge ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...