தமிழகம் ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!! Jun 15, 2021 ஆதார் திண்டுகல் தஸ்மக் கடைகள் திண்டுகல் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டுவருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் குடையோடு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் உடுமலை, மடத்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. குடையுடன் வரும் நபர்களுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட அளவிலான மதுபாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திண்டுக்கல் புறநகர் பகுதியான ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கரையில் ஆதார் மற்றும் குடை கொண்டுவருவோருக்கு மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். … The post ஆதார், குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள்!: திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் தொலைநோக்கு பார்வையால் வணிகவரி துறையில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய்: தமிழக அரசு தகவல்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி: நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்