ஆட்டிறைச்சி விற்பவர்கள் உரிமம் பெற அறிவுறுத்தல்

சிவகங்கை, ஆக.1: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது:ஆட்டிறைச்சி வியாபாரம் செய்யும் அனைத்து வணிகர்களும் உரிய உரிமம், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும். ஆடுவதை செய்யுமிடங்களில் போதிய அளவு நீர் வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். நோயுற்ற ஆடுகளை வதை செய்து விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டிறைச்சி விற்பனை செய்யுமிடத்தை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஆட்டிறைச்சி வாங்கும்போது சில்வர் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆட்டிறைச்சி விற்பவர்கள் உரிமம் பெற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: