×

10 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த  தண்டையார் பேட்டை அப்துல் காதர் (33), முஜ்பூர் ரஹ்மான் (31), பிர்தவுஸ் (33) பல்லாவரம் ஐயப்பன் (23), பூக்கடை கார்த்திக் (29), வில்லிவாக்கம் நாகராஜன் (40), செங்குன்றம் ஆனந்தன் (எ) தலைக்காரி ஆனந்தன் (எ) பீச்சோடா (63), கிழக்கு தாம்பரம் உதயா (எ) உதயகுமார் (26), செங்குன்றம் திலகரசு (25), திருவல்லிக்கேணி பழனி (38) ஆகிய 10 பேரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!