அரியன்வாயல் அரசு பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

பொன்னேரி: மீஞ்சூர் பேருராட்சி 2வது வார்டு அரியன்வாயல் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பிற்கான தேர்வு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மாலா அனைவரையும் வரவேற்றார். மேலிட பார்வையாளார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி ஆணையர் மோகன்குமார் பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள் தேர்வு செய்யும் விதம் உள்ளிட்டவைகளை விளக்கினார். பின்னர் நடைபெற்ற தேர்வில் தலைவராக காதர் பாத்திமா மற்றும் துணை தலைவர் உட்பட 15 பெற்றோர்களும், இரண்டு ஆசிரியர்களாக தலைமை ஆசிரியர் மாலா மற்றும் பெமிளா வசந்தகுமாரி ஆகியோரும் இரண்டு மக்கள் பிரிதிநிதியாக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், வார்டு உறுப்பினர் அபுபக்கர், கல்வியாளர் சேக் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். …

The post அரியன்வாயல் அரசு பள்ளியில் மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: