அரசு மாதிரி பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

 

கூடலூர், ஜூன் 14: கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995-96ம் ஆண்டுகளில் 10ம் வகுப்பில் படித்த மாணவர்கள், சமீபத்தில் ஒன்றுக்கூடி தாங்கள் படித்த பள்ளியை பார்வையிட்டு பள்ளிக்கால நினைவுகளை கூர்ந்து மகிழ்ந்தனர். நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்திற்கு வந்த இந்த மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு 35 பிளாஸ்டிக் இருக்கைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் மேத்யூ, அசீஸ், ஜேம்ஸ், சாஜிதா ஆகியோர் இவற்றை தலைமை ஆசிரியர் ஐயப்பனிடம் வழங்கினர். ஆசிரியர்கள் சுரேஷ், நல்ல குமார், ராஜகோபால், பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

The post அரசு மாதிரி பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: